|
| | பொருளாதார மேம்பாட்டிற்கு ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் - அமைச்சர் வேண்டுகோள் |
|
| | 2012-05-17 11:11:49 xx.jpg)
பனை சார்ந்த உற்பத்திகளை காலத்திற்கு ஏற்றவகையில் நவீன மயப்படுத்தி அதனூடாக சிறந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்மென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | வடகடல் நிறுவனத்தின் செயற்றிட்டங்கள் தொடர்பில் அமைச்சர் ஆராய்வு |
|
| | 2012-05-17 10:54:41 xx.jpg)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சிற்கு கீழான வடகடல் நிறுவனத்தினது செயற்றிட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆராய்ந்தறிந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | வாழ்வெழுச்சித் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் |
|
| | 2012-05-17 10:43:46 
நாடளாவிய ரீதியில் வாழ்வெழுச்சித் திட்டம் தொடர்பிலான முன்னேற்றங்களைக் கண்டறியும் கலந்துரையாடலொன்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | பாடசாலை மாணவர்களுக்கான விசேட தகவல் தொழில்நுட்ப திட்டம் |
|
| | 2012-05-17 01:40:14 
நாட்டின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சிறந்த தகவல் தொழில்நுட்ப அறிவினை பெற்றுக் கொடுக்கும் வகையில் விசேட பாடசாலை தகவல் தொழில்நுட்ப திட்டமொன்று இவ்வருடம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார். |
|
|
| | யாழ். மாவட்ட தேர்தல் வாக்காளர் இடாப்புகள் திருத்த நடவடிக்கை |
|
| | 2012-05-17 01:34:28 
யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் 2012 ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட்ட தேர்தல் வாக்காளர் இடாப்புகளைத் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. |
|
|
| | மன்னார் மாவட்ட நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு! |
|
| | 2012-05-17 01:29:57 .jpg)
மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்டுக்கரை நீர்த்தேக்கம் அகத்திமுறிப்பு குளம் மற்றும் வியாடிக் குளம் என்பன மூலம் விவசாயத்துக்கு தேவையான நீரை வழங்கும் அபிவிருத்தித் திட்டத்தை நீர்பாசன நீர்முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பார்வையிட்டார். |
|
|
| | சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் |
|
| | 2012-05-17 01:26:04 
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கே சண்முகன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். |
|
|
| | சிலாபத்தில் மருத்துவர் மரணம் |
|
| | 2012-05-17 01:22:18 
சிலாபம் பொது மருத்துவமனையில் பணிபுரிந்த இளம் வைத்தியர் ஒருவர் தடுப்பு மருந்து விஷமானதால் பலியானார். |
|
|
| | போக்குவரத்து அமைச்சு - ஜெய்க்கா ஒப்பந்தம் |
|
| | 2012-05-17 01:15:27 
கொழும்பு உள்ளிட்ட அதன் சுற்றுப்புற நகரங்களில் மறுசீரமைப்பினை ஏற்படுத்த ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் முன்வந்துள்ளது. |
|
|
| | எவருக்கும் பாதிப்பின்றி கட்டுநாயக்கவின் 2ஆம் கட்ட அபிவிருத்தி |
|
| | 2012-05-17 01:10:03 
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும் என்று சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார். |
|
|
| | போலி ஆயிரம் ரூபா நாணயத் தாள்களுடன் நால்வர் கைது |
|
| | 2012-05-17 01:05:00 
ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்களை வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள் நீர்கொழும்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். |
|
|
| | அமரர் வி.ஆர்.ரி.ராஜனின் பூதவுடலுக்கு அமைச்சர் இறுதி அஞ்சலி! |
|
| | 2012-05-16 11:41:47 
பிரபல முன்னாள் தொழிலதிபர் அமரர் வி.ஆர்.ரி.ராஜனின் பூதவுடலுக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | புதுக்குடியிருப்பு - கொழும்பு பேரூந்து சேவை! ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். |
|
| | 2012-05-16 11:14:50 
முல்லைத்தீவு மாவட்டம் புதுகுடியிருப்பிலிருந்து கொழும்புக்கான பேரூந்து சேவை இன்று (16) பிற்பகல் நான்கு மணிக்கு ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | நேபாள அரசின் சிரேஸ்ட உத்தியோகத்தர்குழுவின் விஜயம் |
|
| | 2012-05-16 07:29:54 
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நேபாள அரசின் சிரேஸ்ட உத்தியோகத்தர் குழு இலங்கையின் அபிவிருத்தி முகாமைத்துவ கண்காணிப்பு முறைகள் மற்றும் பெறுபேறுகளை மதிப்பிடும் முறைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | சாவகச்சேரி பூநகரி இ.போ.ச பஸ்சேவை ஆரம்பித்து வைப்பு. |
|
| | 2012-05-16 06:27:09 
வடபிராந்திய போக்குவரத்துச் சபையால் சாவகச்சேரி பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து தனங்கிளப்பு ஊடாக பூநகரிக்கான பஸ்சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் (16) இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதம முகாமையாளர் செய்னுர் அப்தீன் அஸ்ஹர் தலைமையில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | யாழ்.மாவட்டத்திற்கு புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் இன்று கடமையைப் பெறுப்பேற்றார் |
|
| | 2012-05-16 05:35:43 
யாழ்.மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தனது கடமையை இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். |
|
|
| | அழகியற்கலை கல்லூரி அனுமதிக்கு செயன்முறை பரீட்சை இல்லை! அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க |
|
| | 2012-05-16 02:00:18 
அழகியற்கலை கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும்போது செயன்முறை பரீட்சைகள் நடத்தப்படாது என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். |
|
|
| | காரைநகர்சாலையிலிருந்து கண்டிக்கான இ.போ.ச பஸ்சேவை ஆரம்பம். |
|
| | 2012-05-16 01:55:40 
வடபிராந்திய போக்குவரத்துச் சபையால் நேற்றைய தினம் (15) காரைநகர் சாலையிலிருந்து 6.30 மணிக்கு 782 பாதையூடாக கண்டிக்கான பேரூந்து சேவை ஆரம்பித்து யாழ.மத்திய பேரூந்து நிலையத்தை வந்தடைந்து யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து இரவு 8.30மணிக்கு கண்டிக்கான பஸ்சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதம முகாமையாளர் செய்னுர் அப்தீன் அஸ்ஹர் தலைமையில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | ஹோமியோபதி வைத்தியத்துறை இந்திய பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவருக்கு பட்டப்படிப்பு |
|
| | 2012-05-16 01:53:17 
இந்தியாவில் ஆயுர்வேதம் யூனானி சித்த வைத்தியம் மற்றும் ஹோமியோபதி வைத்தியத்துறைகளில் பட்டப்படிப்பு பட்டபின்படிப்பு மற்றும் கலாநிதி பட்டப்படிப்புகளை புலமைப்பரிசில் அடிப்படையில் பெறுவதற்கு இலங்கை மாணவ மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. |
|
|
| | கிராம சேவகர் நியமனம் வயது அதிகரிப்பு |
|
| | 2012-05-16 01:48:10 
கிராம சேவையாளர் பதவிக்கு புதியவர்களை நியமிக்கும் போது வயது மட்டங்களை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. |
|