Home English Tamil
     
   
 
 தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு தமிழில் அரச சுற்று நிரூபங்களை அனுப்புமாறு ஜனாதிபதி பணிப்புரை
 

தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு அரசாங்கத்தினால் திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் சுற்று நிரூபங்கள் தமிழில் அனுப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்ற குறை நீண்ட காலமாக நிலவி வருகிறது. இவ்விடயம் தொடர்பாக அண்மையில் வட பகுதியிலிருந்து கொழும்புக்கு தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்த மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்களினால் ஜனாதிபதியின் மேலான கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சரும், வட மாகாண விசேட செயலணித் தலைவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் கடந்த வாரமளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இச்சந்திப்பிலேயே அரசாங்கத்தால் அனுப்பப்படும் சுற்று நிரூபங்கள் தமிழில் அனுப்பப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கவனத்தில் கொண்ட ஜனாதிபதி அவர்கள் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இவ்விடயம் குறித்து சகல அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


இதன் பிரகாரம் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு அனுப்பப்படும் சுற்று நிரூபங்கள் யாவும் தமிழ் மொழி மூலம் அனுப்புவதற்கும், அரச சுற்று நிரூபங்களை மும்மொழியிலும் அச்சிட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்; பணிப்புரை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு சிங்கள மொழியில் சுற்று நிரூபங்கள் அனுப்பப்படுவதால் அவற்றை படித்துப் புரிந்து கொள்வதற்கு ஒவ்வொரு அரசாங்க ஊழியர்களும், திணைக்களங்களும் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.