 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | மடு தேவாலயத்தின் சுற்றாடல் அனைத்து மக்களினதும் சுதந்திரமான வழிபாட்டிற்கு உகந்ததாக உருவாக்கப்பட வேண்டும்! |
| | | தொடரும் படை நகர்வின் மூலம் மடுமாதா தேவாலயத்தை புலிகளிடம் இருந்து விடுவித்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். புனிதத்தலமான மடு தேவாலயம் யுத்த சேதங்கள் எதுவுமின்றி மீட்கப்பட்டிருப்பது மக்களின் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இத்தகைய மக்களின் மன மகிழ்ச்சியில் நாமும் பங்கெடுக்கின்றோம்.
ஆராதனைக்குரிய வழிபாட்டுத் தலங்களை ஆயுதங்கள் ஆட்சி செய்ய முடியாது! அந்த வகையில் ஆயுதங்களோடு நடமாடிய புலிகளின் பிடியில் இருந்து மடு தேவாலயத்தை படையினர் மீட்டெடுத்திருப்பதோடு மட்டும் நின்று விடாமல், அங்கு அனைத்து மக்களினதும் சுதந்திரமான வழிபாட்டிற்குரிய சூழலையும் உருவாக்கி கொடுக்க வேண்டும்.
தொடரும் படை நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் திருக்கேதீஸ்வரர் ஆலயம் படையினரின் பூரண கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற போதிலும் அங்கு நடந்து முடிந்த உற்சவங்களில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு சுதந்திரமான வழிபாட்டில் ஈடுபடுவதற்கான சூழலையும் பாதுகாப்பையும் படையினர் உருவாக்கி கொடுத்திருக்கின்றார்கள். இது விரும்பி வரவேற்கத்தக்க விடயமாகும். இது போலவே படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகள் எங்கும் இருக்கும் வழிபாட்டுத்தலங்கள் தோறும் சுதந்திரமான வழிபாட்டிற்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ளனர்.
ஆகவே படையினரால் மீட்கப்பட்ட மடு தேவாலயத்தின் சூழலையும் மக்களின் சுதந்திரமான வழிபாட்டிற்குரியதான புனித பிரதேசமாக ஆக்குவதற்கும், வழிபட செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமான கட்டாய கடமைகள் குறித்து கரிசனையோடு கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
இது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களுடன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இதேவேளை மடுமாதா திருச்சொரூபத்தினை மக்களின் விருப்பங்களுக்கு மாறாக அங்கிருந்து புலிகள் அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது எமது மக்களின் ஆன்மீக உணர்வுகளை புண்படுத்தும் செயலாகும்.
மடு தேவாலயத்தில் மாதா சொரூபச்சிலையினை மறுபடியும் புலிகள் தாமதமின்றி ஒப்படைப்பதே உரிய செயலாகும். கத்தோலிக்க ஆயர்கள், வண.பிதாக்கள், மட்டுமன்றி சர்வ மதத்தலைவர்களும், மனித நேய அமைப்புகளும், மத ஸ்தாபனங்களும் இது குறித்த அழுத்தங்களை புலித்தலைமையிடம் எடுத்துச்செல்ல வேண்டியது பாரிய கடமையாகும்.
சகல மக்களும் விரும்பும் ஆன்மீக வெளிச்சங்களை திரை போட்டு மறைக்கும் தடைகளை அகற்றி எமது மக்களின் ஆன்மீக உணர்வுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்!
ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சி ஈ.பி.டி.பி |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Tamilnewsweb, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |