Home English Tamil
     
   
 
 இலங்கையில் கனிய வளங்களை கண்டறிய ஆய்வு
 

22.09.2012 -  சனிக்கிழமை

இலங்கையின் கனிய வளங்கள் பற்றி வான்வழி ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் டாக்டர் எம்.ஜே.விஜயானந்த தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வுக்கான செலவு  17 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். இது ஒன்றரை வருடங்களில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1950 ஆண்டுகளின் பின் நடைபெறும் வான்வழி ஆய்வாக இது அமையும் எனவும் எம்.ஜே.விஜயானந்த கூறினார்.

மண்ணில் ஆசனிக் நஞ்சு இருப்பதாகக் கூறப்படும் அநுராதபுரம் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் முதலில் இந்த ஆய்வு நடைபெறும் எனவும் அவர் கூறினார்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.