Home English Tamil
     
   
 
 கைத்தொழில் பேட்டைகளின் மேம்பாடு தொடர்பில் அமைச்சர் தலைமையில் ஆராய்வு!
 

21.09.2012 -  வெள்ளிக்கிழமை

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழான கைத்தொழில் பேட்டைகளின் செயற்றிட்டங்களை மேம்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் மேற்படி விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது அமைச்சின் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழான கைத்தொழில் பேட்டைகளின் தொழில்துறைகளை மேம்படுத்தி அதன் ஊடாக துறைசார் செயற்றிட்டங்களை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் கைத்தொழில் பேட்டைகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்;ந்தறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் ஜெகராசசிங்கம், கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தலைவர் உதயசிறி காரியவசம், பொதுமுகாமையாளர் ஜஸ்மின் மன்னப்பெரும ஆகியோர் உடனிருந்தனர்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.