Home English Tamil
     
   
 
 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணம் உயரும்
 

21.09.2012 - வெள்ளிக்கிழமை

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய நீர்வழங்கள், வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

5-20 வீதம் வரை வௌ;வேறு மட்டங்களில் நீர் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அந்த சபையின் பொது முகாமையாளர் லால் பிரேமநாத் குறிப்பிட்டார்.

இதன் பிரகாரம் வீட்டுப்பாவனை மற்றும் வர்த்தக நோக்கங்களுக்கான நீர் விநியோகக் கட்டணம் 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

முதலீட்டு திட்டங்களுக்கான நீர் கட்டணம் 15 வீதத்தால் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறியளவிலான கைத்தொழிலுக்கான நீர் கட்டணம் 5 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதுதவிர கப்பல்களுக்கு விநியோகிக்கப்படும் நீருக்காக அறவிடப்படும் கட்டணத்தையும் 20 வீதத்தால் உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத ஸ்தலங்களுக்கான நீர் கட்டணம் உயர்த்தப்பட்டமாட்டாதென பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.