Home English Tamil
     
   
 
 உள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பான இரு சட்டமூலங்கள் அடுத்தமாதம் நிறைவேற்றப்படும்
 

20.09.2012 -  வியாழக்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறைமை குறித்த இரு சட்டமூலங்கள் எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படுமென அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டமூலம் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டம் ஆகிய இரு சட்டமூலங்களையும் நிறைவேற்றுவதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர்.

உத்தேச சட்டத்தின்படி, உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான 70 சதவீத பிரதிநிதிகள் தொகுதிவாரி முறைமை மூலம் தெரிவுசெய்யப்படுவர். 30 சதவீதமான பிரதிநிதிகள், விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் மூலம் தெரிவு செய்யப்படுவர்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.