Home English Tamil
     
   
 
 நெடுந்தீவு தூண்காலை பிரதேசத்துக்கான மின் விநியோகம் ஆரம்பம்
 

23.08.2012 - வியாழக்கிழமை

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் நெடுந்தீவு மேற்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தூண்கலைப் குடியிருப்பு பகுதிக்கு மின்இணைப்புக்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டன.

பல வருடங்களாக மின் இணைப்புக்களுக்கான வடங்கள் பொருத்தப்பட்ட நிலையில் மின் இணைப்புக்கள் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படாத நிலையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) மற்றும் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன்(கமல்) ஈ.பி.டி.பியின் நெடுந்தீவு பிரதேச அமைப்பாளரும், நெடு;ந்தீவு பிரதேச சபைத் தவிசாளருமாகிய தானியேல் றெக்சியன் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி ஆகியோர் மேற்கொண்ட பெருமுயற்சியின் பயனாக இவர்களுக்கு மகிந்த சிந்தனையின் கீழ் இலவசமாக மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.