Home English Tamil
     
   
 
 18 வயதுக்கு கீழ் பிள்ளைகள் உள்ள தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு  பணிப்பெண்களாக செல்வதைத் தடுக்கும் வகையில் விரைவில் சட்டம்
 

23.08.2012 - வியாழக்கிழமை

18 வயதுக்கு கீழ் பிள்ளைகள் உள்ள தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதைத் தடுக்கும் வகையில் விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள்மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அவற்றை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்கிறோம். 5வயதுக்கு குறைந்த பிள்ளைகள் உள்ள தாய்மார் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் தடைச்சட்டம் கொண்டுவரப்படுவதா, அல்லது 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களை வெளிநாடு செல்வதை தடைசெய்யும் வகையில் சட்டத்தை திருத்துவதா என்பதுதான் பிரச்சினையாக உள்ளது. எவ்வாறோ விரைவில் தடைச்சட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.