Home English Tamil
     
   
 
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி சந்திப்பு.
 

09.08.2012 - வியாழக்கிழமை
 
கருத்தரங்கு ஒன்றில் பங்குகொள்ளும் முகமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி அவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்திப்பொன்றினை மேற்கொண்டார்.
 
ஹோட்டல் தாஜ்சமூத்திராவில் நேற்று மாலை இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இலங்கையின் குறிப்பாக வடக்கு கிழக்கு நிலவரங்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கேட்டறிந்த டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் இந்திய தமிழ்நாட்டு நிலவரங்கள் குறித்து எடுத்துக்கூறியதுடன் இலங்கை தமிழ்பேசும் மக்கள் குறித்த இந்திய தமிழ்நாட்டு மக்களின் கரிசனையினையும் வெளிப்படுத்தினார். மேலும் தமிழ் பேசும் மக்களுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிவரும் சேவையினை பெரிதும் வரவேற்ற கலாநிதி சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் இப்பணியானது இக்காலகட்டத்தில் தொடரவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
 
இச்சந்திப்பில் பிரபல ஊடகவியலாளர் கே.ரீ.ராஜசிங்கம் அமைச்சரின் இணைச்செயலாளர் க.ராஜ்குமார் (றொபின்) ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.