 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | மக்கள் ஓரணி திரளும்போது அவர்களுடைய எதிர்பார்ப்பு வெற்றிபெறும் - ஈ.பி.டி.பி யாழ் மாவட்ட அமைப்பாளர் கமல் |
| | | 07.08.2012 - செவ்வாய்க்கிழமை
ஊர்காவற்துறை பிரதேச சபையினால் தனியார் பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நீண்டகாலமாக பஸ்தரிப்பு நிலையம் இன்றி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்த மக்களின் கோரிக்கையினை ஊர்காவற்துறை பிரதேசசபை தவிசாளர், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதன் முகமாக ஊர்காவற்துறை தனியார் பஸ்பேரூந்து நிலையத்திற்கான 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (07) ஊர்காவற்துறை தனியார் பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி.கமலேந்திரன் (கமல்) மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்; நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய யாழ். மாவட்ட அமைப்பாளர், தீவக பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் எமது தலைவர் கூடுதல் அக்கறை செலுத்தி வருவதுடன் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இவற்றில் சில அபிவிருத்திப் பணிகள் உடனடியாகவும் ஏனையவை கட்டம் கட்டமாகவும் இடம்பெறும் என தெரிவித்ததுடன் ஊர்காவற்துறைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளுக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் ஊர்காவற்துறைப் பிரதேசம் சிறந்த முறையில் கட்டியெழுப்பப்படும் எனவும், தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தியதாக அரசியல் பணியினை முன்னெடுத்து வரும் எமது தலைவரின் வழியில் மக்கள் ஓரணி திரளும்போது ஊர்காவற்துறைப் பிரதேசத்தினை சகல துறைகளிலும் சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியுமென தெரிவித்ததுடன். மண்டைதீவு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு இணங்க இன்றைய தினம் மண்டைதீவு பிரதேசத்திற்கான மின்கம்பங்களை நாட்டுவதற்கான கொங்கிரீட் குவளைகள் அனுராத புரத்தில் இருந்து தருவிக்கப்பட்டு நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ஓரிரு தினங்களில் மின்கம்பங்களை நாட்டும் பணிகள் முண்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் ஊர்காவற்துறைப் பிரதேச சபைத்தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்று ஒராண்டு பூர்த்தியாகும் நிலையில் இன்றைய தினம் ஊர்காவற்துறைப் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு இணங்க 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் தனியார் பஸ்தரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இடம் பெறுவதாக தெரிவித்ததுடன் நெல்சிப் திட்டத்தின் கீழ் ஊர்காவற்துறை பிரதேச வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ஊர்காவற்துறை பிரதேச மக்களின் நீர்த்தேவையை பூர்திசெய்யும் முகமாக அக்கா தங்கைக்குள புனரமைப்புப் பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஊர்காவற்துறை பிரதேச செயலர், ஊர்காவற்துறை பிரதேச மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |