Home English Tamil
     
   
 
 அமைச்சின் செயற்திட்டங்கள் தொடர்பில் செயலமர்வு
 

07.08.2012 -  செவ்வாய்க்கிழமை

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திக்கான வேலைகள் மற்றும் நிகழ்வுகளுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்தறியும் செயலமர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு 07 ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள மகாவலி நிலையத்தில் காமினி திசாநாயக்க அரங்கில் மேற்படி செயலமர்வு இன்றைய தினம் (7) இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் தொடக்க உரையினை அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியும், அமைச்சின் கட்டமைப்பு மற்றும் அதன் பயன்பாடுகள் தொடர்பான உரையை திட்டப்பணிப்பாளர் அஜித் ஏக்கநாயக்கவும் நிகழ்த்தினர்.

செயலமர்வின் நோக்கம் மற்றும் அவசியம் தொடர்பாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதன் போது கருத்துத் தெரிவித்தார்.

முழுநாள் நிகழ்வாக நடைபெற்ற இச் செயலமர்வில் அமைச்சின் கீழான பனை அபிவிருத்திச் சபை, கைத்தொழில் அபிவிருத்திச் சபை, தேசிய அருங்கலைகள் பேரவை, தேசிய வடிவமைப்பு நிலையம் மற்றும் வடகடல் நிறுவனம் ஆகியவற்றினது செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதில் அமைச்சரின் ஆலோசகர் திருமதி வி.ஜெகராஜசிங்கம், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா உள்ளிட்ட யு.என்.டி.பி, யுனிசெப், உலகவங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளும், அமைச்சின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.