Home English Tamil
     
   
 
 ஆசிய பசுபிக் வலய தாதிமார் பரிமாற்றல் மாநாடு ஆரம்பம்!
 

07.08.2012 - செவ்வாய்க்கிழமை

ஆறாவது ஆசிய பசுபிக் வலய தாதிமார் பரிமாற்றல் மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பமான இந்த மாநாடு எதிர்வரும் பத்தாம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும்.

சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித மஹிபால தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆசிய பசுபிக் வலயத்தின் 22 நாடுகளைச் சேர்ந்த டாக்டர்கள் தாதிமார் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதுவரை ஆறு ஆசிய பசுபிக் நாடுகளில் இம்மாநாடு நடைபெற்றது. தெற்காசிய நாடொன்றில் இத்தகைய மாநாடு நடைபெறுவது இதுவே முதற்தடவையாகும். இலங்கையில் தற்சமயம் அமைதியான சூழல் நிலவுவதாலேயே இம்மாநாட்டை இம்முறை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.