Home English Tamil
     
   
 
 செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியை ஆரம்பித்தது கியூரியோசிட்டி
 

07.08.2012 - செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க் கிரகம் தொடர்பில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நாசாவினால் அனுப்பப்பட்ட கியூரியோசிட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள விண்கலமானது நேற்று (06.08.2012) அதிகாலை செவ்வாய்க்கிரகத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக நாசா அறிவித்துள்ளது.

இவ்விண்கலம் சுமார் 8 மாதங்கள் 352 மில்லியன் மைல்களைக் கடந்து செவ்வாய்க்கிரகத்தை அடைந்துள்ளது. குறித்த விண்கலத்தின் நிறை 1 தொன்னாகும். இன்னும் சில நாட்களில் அது தன் செயற்பாடுகளைத் தொடங்கவுள்ளது.

செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உலோகங்கள், கனியுப்புகள், திண்மக் கூறுகள் காணப்படுகின்றனவா  என்பது தொடர்பிலும் ஆராயவுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக இடப்பட்ட திட்டம் தற்போது 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிறைவாகியுள்ளது. இதனால் விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

அணு சக்தியில் இயங்கும் கியூரியோசிட்டி விண்கலமானது சிறிய காரின் அளவினை ஒத்ததாகும்.

கமெரா, தொழில்நுட்ப உபகரணங்கள், வானிலை அறியும் கருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளதுடன்  சக்திவாய்ந்த துளையிடும் சாதனத்தையும்  கொண்டுள்ளது.

இதனைத்தவிர லேசர் வசதி, இராசாயனக் கட்டமைப்பினை ஆராய்வதற்காக இரசாயன ஆய்வுகூடம் என்பவற்றினையும்  கியூரியோசிட்டி கொண்டுள்ளது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.