13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குமாறு அமைச்சரவை அங்கீகாரம் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு
14.05.2009
அமைச்சரவை உரைப்பதிவுக் குறிப்பு
13ம் சட்டத்திருத்தத்தில் உள்ள சரத்துக்களை நடைமுறைப்படுத்தி உச்ச உரிமைகளை பெற வழி வகுத்தல்
இடைக்கால அறிக்கை ஒன்றினை சர்வகட்சிக் குழு தலைவர் பேராசிரியர் கௌரவ திஸ்ச விதாரண அவர்கள் மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்~விடம் கையளித்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது. அறிக்கை 2008 ஜனவரி 28ல் கையளிக்கப்பட்டது. அதன் சாரம்சம் குறுகிய கால எல்லையில் மாகாணங்களுக்கான ஆட்சி உரிமைகள் நிறைவாகவும் உச்சப் பயன்பாடுடையதாகவும் யாப்பில் உள்ளவாறு நடைமுறைப்படுத்தலென்பதாகும்.
ஜனாதிபதி அவர்கள் இரு பிரதான முன்மொழிவுகளை இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கியுள்ளார். ஒன்று கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலும் வடக்கு மாகாணத்திற்கான விடேச செயலணித் தலைமையுமாகும்.
எவ்வாறாயினும் 13ம் சட்டத்திருத்த அறிக்கையிற் குறிப்பிட்டவாறு கூடுதல் நிர்வாக கட்டமைப்பும் 13ம் சட்டத் திருத்தத்தில் விதப்புரை செய்யப்பட்ட இடைக்கால அறிக்கையை நடைமுறைப்படுத்த எவ்வாறாயினும் கூடுதல் நிர்வாகக் கட்டமைப்புத் தேவைப்படும். அப்போது தான் உச்சப் பெறுபேற்றினை அடைய முடியும்.
புலித்தலைமையுடனான மண்மீட்பு யுத்தத்தின் வெற்றியானது அரசினை 13ம் திருத்த சட்டவாக்கத்திற்கு அப்பாலும் செல்லும் விருப்பினை உருவாக்கியுள்ளது .அதனை 13ம் சட்டத்திருத்த பிளஸ் என அழைப்போம். இத் திருப்பம் மேற்குலகில் புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப்புலிகளுக்குச் சார்பாக பிரச்சாரம் செய்வோர்க்கு நல்ல விழிப்புணர்வைக் கொடுக்கும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான யுத்தம் என்ற போர்வையில் அழிவுக்கான யுத்தத்தைப் புலிகள் நடத்தியுள்ளனர். இலங்கைத்தீவில் புலித்தலைமையை அழித்தொழித்த பின்பும், அவர்களுக்குச் சார்பான தமிழ் அரசியல் கட்சிகள் அழிவுப் பாதையிலேயே தொடர்கிறார்கள். இந் நிலையில் அரசு தீர்க்கமான தமது அரசியல் தீர்வின் விருப்பினை முன்வைக்கும் வேளை நெருங்கிவிட்டது.
அண்மையில், ஜெனிவாவில் டர்மன் மீளாய்வு மாநாட்டில் எனது உரையின் போது மாநாட்டு பங்குபற்றுவர்களுக்கு தெளிவுபட அரசின் நிலைப்பாட்டை அதாவது 13ம் திருத்தச் சட்டத்திருத்தத்திற்கும் அப்பால் செல்லும் ஆரோக்கியமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினேன். அக்கருத்தினை மேதகு ஜனாதிபதியிடம் இருந்து பெற்ற உறுதிப்பாட்டோடு முன் வைத்தேன்.
உச்ச நிறைவேற்றத்திற்கு தேவையான செயற்பாடுகள்
01. தீர்க்கமாக நடைமுறைப்படுத்தலுக்குத் தேவையான நிர்வாக ஒழுங்குகள்.
a) ஆட்சி உரிமைகளை மாகாணங்கள் செயற்படுத்துவதற்கு மத்தியில் நிரல் படுத்தப்பட்ட செயற்பாடுகளும், விடயங்களும் முழுமையாக மாகாணங்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.
b) மாகாணங்களுக்கு உரித்துடைய விசேட கருத்திட்டங்களுக்கான நிதிகளை கையளித்து உதவ வேண்டும்.
c) உள்ளக இடம் பெயர்ந்தோரின் மீள் குடியமர்த்தல் விவகாரத்தை மாகாணங்கள் செயற்படுத்த அனுமதித்தல், அத்தகைய பாரிய செயற்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளையும் கையளித்தல்.
d) சீரிய செயற்பாட்டிற்கு தேவையான நிதி உதவிகளை மாகாணசபைகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.
e) வடக்கு, கிழக்கு மட்டுமன்றி நாட்டின் எல்லாப் பாகங்களிலும் தமிழ் பேசும் மக்கள் பொலிஸ் நிலையங்களில் தொடர்பு கொள்ள தமிழ்மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதியளவு உள்வாங்கப்பட வேண்டும்.
f) அமைச்சுகள், அரசதாபானங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் பொதுத்தாபனங்கள் எல்லாவற்றுடனும் தமிழ்மொழி பேசுவோர் தமது தாய்மொழியிற் தொடர்பு கொள்ளும் வகையில் எல்லா வழி முறைகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.
g) தொலுக்கரிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் சகலவிதமான சலுகைகளும் சிறுபான்மை இனத்தவர் அடையும் பொருட்டு சகல நீதிமன்றுகளிலும், நீதி நிர்வாகங்களிலும் இடம் பெறவேண்டும்.
h)(f),(g) என்ற பகுதிகளிற் குறிப்பிட்டவாறு வடக்கு, கிழக்கில் சிங்களப் பெரும்பான்மை இனத்தவர்க்கும் அவர் மொழியில் பங்கு கொள்ள வாய்ப்புக்கள் செய்ய வேண்டும்.
02. 13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டவாக்கத் தேவை
a) அரச கருமமொழி பயன்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த (அத்தியாயம் IV) பிரகாரமும் யாப்பின் 18(4) கட்டுரையில் உள்ளவாறும் செயற்படுத்த பாரளுமன்றம் சட்ட மூலம் பிறப்பித்தல் வேண்டும்.
03. மாகாணங்களுக்கு மேலும் வலுவுடையதாக்க யாப்புத் திருத்தச் சட்டம் தேவையாகும். (13 திருத்தச்சட்ட +)
a) நடைமுறை நிரலை இல்லாதாக்கி யாப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். மாகாணசபைக்குரிய நிரலில் அவ் விடயங்களும் செயற்பாடுகளும் சேர்க்கப்பட வேண்டும்.
b) யாப்பில் உள்ள கட்டுரை 154P மாகாண உயர் நீதிமன்றங்களை நிறுவ வகை செய்யும். அதனைத் தொடர்ந்து வர்த்தக உயர் நீதிமன்றத்தை கொழும்பில் நிறுவ உதவும். பிரதம நீதியரசருக்குரிய வலு பரவலாக்கல் எண்ணக்கருவிற்கு முரணாக அமையும். மாகாண உயர்மன்றுகளுக்கிடையிலான வழக்கு பரிமாற்றங்கள் மேற்கூறிய முரணுக்கு உதாரணமாய் அமையும். யாப்புத் திருத்தம் கருத்துடையதாக அமைய நீதி நிர்வாக பரவலாக்கல் செயல்படுத்தப்பட வேண்டும். பரவலாக்கல் எண்ணக் கருவிற்கு முரணாக அமையாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
c) 17ம் சட்டத்திருத்தற்கமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிறுவுதல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட 154பு(3) கட்டுரையில் உள்ளடக்கப்பட்ட கருத்திற்கு முரணானது. மாகாண சபைகளின் எண்ணங்களுக்கு அமைய பொலிஸ் வலுவானது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிலும் இருத்தல் முரணானதே. இக் கருத்து முரண்பாட்டைப் போக்க தேவையான யாப்புத் திருத்தம் தேவைப்படுகிறது.
d) யாப்புத் திருத்தம் நிறுவுதல் மாகாணசபைகளின் சட்ட சபையிலேயே தங்கியுள்ளது.
04. வடக்கிற்கு மாகாண சபைத் தேர்தல் நடாத்துதல் a) 13ம் சட்டத்திருத்தம் சிறப்பாக நடைமுறைப்படுத்த அரசியல் தலைமை வடமாகாணத்திற்கு அவசியமாகும். அது நிர்வாக உந்துசக்திக்கு வேண்டுவதாகும். விடுதலைப்புலிகளின் பிடியிருந்து வடக்கு மீட்கப்பட்டதும் காலதாமதமின்றி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அது வடக்கு மக்களுக்கு அரசியல் பங்களிப்பும் வலுவும் சேர்ப்பதாகவும் அமையும்.
அமைச்சரவை எதிர்பார்த்த விதப்புரைகளும் அனுமதியும்
மேற்குறித்த விடயம் சார்பாக எனது விதப்புரைகளுக்கு அமைச்சரவை அனுமதியையும் வேண்டி நிற்கின்றேன்.
01. பந்தி 1(a) தொடக்கம் 1(h) வரை மேலே குறிப்பிட்ட நிரல்களுக்கு அமைய 13ம்
சட்டத்திருத்தம் சிறப்பாக நடைமுறைப்படுத்த தேவையான நிர்வாக ஒழுங்குகள்
ஆக்கப்பட வேண்டும்.
02. அரச கருமமொழி பயன்பாட்டு நடைமுறைக்கு சட்ட ரீதியாக கட்டுரை 18(4) யாப்பிற் குறிப்பிட்ட நிபந்தனை நிலைநாட்டப்பட வேண்டும்.
03. 3 (a) தொடக்கம் 3 (d) வரை குறிப்பிட்ட யாப்பின் திருத்தங்கள் மேலதிக வலுக்களை பெறுவதற்கு தேவையாகும்.
04. புலித்தலமையின் பிடியிலிருந்து வடக்கு விடுதலை அடைந்த கையோடு தாமதமின்றி வடக்கிற்கு தேர்தல் நடாத்தப்படுதலாகும்.
கௌரவ. டக்ளஸ் தேவானந்தா, பா. உ.
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்